பாரதி தமிழ்ச் சங்கம் - 2007ம் ஆண்டு தீபாவளி நிகழ்ச்சி
வளைகுடாப் பகுதியில் புதிதாகத் துவங்கப் பட்டுள்ள பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் ஃப்ரீமாண்ட் கோவில் சரஸ்வதி அரங்கில், நவம்பர் 19 தேதி தீபாவளித் திருவிழா கொண்டாடப் பட்டது. டாக்டர் கற்பகம் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சவுந்தர்ய லகரி குழுவினர் தமிழில் இயற்றப் பட்ட சொளந்தர்ய லகரி பாடல்களைச் சிறப்பாகப் பாடி நிகழ்ச்சியை துவக்கினார்கள். தொடர்ந்து செல்வி கீர்த்தனா வாய்ப்பாட்டு, அக்ஷ்யா நரேஷ் குழுவினரின் புல்லாங்குழல், அஜிதா இயக்கத்தில் வெற்றி எட்டுத் திக்கும் என்ற நாட்டிய நாடகம் நடை பெற்றது. சிறுவர்களின் கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரு.கலவை வெங்கட், "அமெரிக்காவில் தமிழ் கலாச்சாரம் அன்றும், இன்றும் இனி என்றென்றும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும், பாரதி தமிழ் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கினார். சொற்பொழிவைத் தொடர்ந்து திரு.நாகவேந்திரன் கலிஃபோர்னியா பாடத் திட்ட பிரச்சினைகள் குறித்தும், வழக்கின் தற்பொழுதைய முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். உரைகளைத் தொடர்ந்து திவ்யா மோகன் வயலின், பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல், தீபா மகாதேவன் குழுவினரின் நடனம், நித்தியவதி குழுவினரின் நாட்டியம் ஆகிய சிறுவர் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. சிறுவர்களின் நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் தவிர சித்ரா கருணாகரன் குழுவினரின் ராமாயண நாடகமும், லதா ஸ்ரீநிவாசன் குழுவினரின் சிந்துநதியின் இசை எனும் பாஷன் ஷோவும், கொளரி சேஷாத்ரி குழுவினரின் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடை பெற்றன. சிறுவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் திறமையினை வெளிக்காட்டினார்கள். ஆடல், பாடல், புல்லாங்குழல் வயலின் இசைகளுடன் தீபாவளி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அரங்கேறியது. சிறுவர்களுக்காக ஓவியப் போட்டியும், மகளிருக்காக ரங்கோலிப் போட்டியும் நடத்தப் பெற்று பரிசுகள் வழக்கப் பட்டன. அரங்கு நிறைந்த விழா நன்றி அறிவிப்பு மற்றும் பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. பாரதி தமிழ் சங்கம் சார்பில் தொடர்ந்து மார்கழி மாத ஆண்டாள் திருப்பாவை, பொங்கல் விழாவினை ஒட்டி நாட்டிய நிகழ்ச்சி போன்றவை நடை பெற இருக்கின்றன
2008ம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கம் - பொங்கல் நிகழ்ச்சிபாரதி தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் திருவிழாசான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சென்ற வருடத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வரும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், கடந்த ஃபிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை, சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள இந்துக் கோவில் கலையரங்கத்தில் பொங்கல் திருவிழா மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. டாக்டர் கல்பகம் கௌசிக் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.90.1 எஃப் எம் இட்ஸ் டிஃப் வானொலியின் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா தன் கலகலப்பான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் நிகழ்ச்சியை சுவாரசியமாகத் தொகுத்து வழங்கினார்.பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகி ராகவேந்திரன் சங்கத்தின் நோக்கங்களைக் கூறி, வரவேற்புரை அளிக்க நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர்களும் பெரியவர்களும் பங்கு கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றன. 500க்கும் மேற்பட்ட வளைகுடாப் பகுதி தமிழர்கள் கோவிலின் பெரிய கலையரங்கம் நிறைய அமர்ந்து கண்டு களித்தனர்.
கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து தேசத்தினைப் போற்றும் பாரதியின் வந்தே மாதரப் பாடலை
மீனா வெங்கடேஷ் பாடினார். பாடல் முடிந்தவுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவையோரை வந்தே மாதரம் என்று தன்னுடன் சேர்ந்து முழங்கச் சொல்ல, அரங்கமே அதிரும் அளவுக்கு பார்வையாளர்கள் வந்தே மாதரம் என்று பாரத மாதாவை வாழ்த்தினார்கள். தொடர்ந்து கீர்த்தனா ஸ்ரீகாந்த், கர்நாடக சங்கீதம் பாடினார், காய்த்ரி ராமநாதன், ராஜேஸ்வரி ராமநாதன் குழுவினர் நடனம் ஆடினார்கள். தொடர்ந்து திருமதி சுகி அவர்களின்இயக்கத்தில் குழந்தைகள் பொங்கல் நாட்டியமும் கொன்றை வேந்தன் பாடல்களும் அடங்கிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர். தொடர்ந்து மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பார்த்தசாரதியாக ஆகும் நிகழ்வை ஒரு சிறிய நாடகம் மூலம் சின்னஞ்சிறுவர்களைக் கொண்டு அழகாக இயக்கி நடத்தினார் சித்ரா கருணாகரன். தொடர்ந்து அக்ஷயா நரேஷ், நிகில் வைத்யா இருவரும் புல்லாங்குழல், தபலா இசை வழங்கினார்கள். பாரம்பரிய இசை நாட்டிய நிகழ்சிகளின் நடுவே ஒஜாஸ் மந்த்ரா குழுவினரின் நடனமும், நித்யவதி சுந்தரேஷ் இயக்கத்தில் சிறுவர்கள் ஆடிய பல்லேலக்கா என்ற நடனமும், ஹரிப்ரியா சுந்தரேஷ் இயக்கத்தில் சிறு குழந்தைகளின் திரையிசை நடனமும் இடம் பெற்றன. திரையிசைப் பாடல்களைத் தொடர்ந்து சாந்தி சதீஷ் ஒருங்கிணைப்பில் பக்திப் பாடல்களுக்குச் சிறுவர்கள் ஆடிய நிகழ்ச்சி அரங்கேறியது. தீபா மகாதேவன் ஒருங்கிணைப்பில் அவரது நாட்டியக் குழுவினர்கள் மூன்று பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிறுவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகத் தங்கள் கலைத் திறமையினை வெளிக்காட்டி அரங்கத்தினரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றனர். நாட்டியக் குழுவினர் அனைவரும் சிறப்பான அபிநயமும், பாவமும் காட்டி தாள கதி தப்பாமல் நாட்டியம் ஆடி மகிழ்வித்தனர். சுகி அவர்கள் குழுவினர் பொங்கல் திருநாளின் பாரம்பரிய வடிவத்தை மேடையில் சிறப்பாகக் கொண்டு வந்திருந்தனர். உச்சரிப்புச் சுத்தத்துடன் தமிழில் பேசி சிறுவர்கள் நடத்திய மகாபாரத நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாடல்களும் ஆடல்களும் ஒரு இனிய கலை அனுபவத்தை அளித்தன.
இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அருண் விஸ்வநாதன்
சுவையான பல குரல் நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த ஸ்ரீகாந்த்தும் பழம்பெரும் நடிகர்கள் பாலையா, சிவாஜிகணேசன் குரல்களில் பேசி மிமிக்ரி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அருண் விஸ்வநாதன் தன் அநாயசமான குரல் வளத்தாலும் நடிப்புத் திறமையாலும் அரங்கத்தின் கரகோஷத்தைப் பெற்றார். பார்வையாளர்களின் கோரிக்கையின் பேரில் ரஜினி காந்தின் குரலில் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்தி விட்டார். கமலஹாசன், ரஜினி, பாரதிராஜா, சாலமன் பாப்பையா, பாக்யராஜ் என்று பலரது குரல்களிலும் மாற்றி மாற்றிப் பேசி ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளினார்.
சிற்றுண்டி இடை வேளையைத் தொடர்ந்து கலவை வெங்கட் அவர்கள் சிறுவர்களுக்கான ஒரு வினா விடை நிகழ்ச்சியினை நடத்தினார். இந்து மதப் புராணங்களில் இருந்தும், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றியும் கேள்விகள் இடம் பெற்றன. சுக்ரீவனின் சகோதரன் யார், சிதம்பரம் கோவிலில் என்ன கடவுள் உறைகின்றார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் மூன்று குழுவாகக் கலந்து கொண்ட 12 சிறுவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சரியாகப் பதில் அளித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியாக வளைகுடாப் பகுதியின் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்ட 'குழந்தைகளின் கல்வியில் பெரிதும் துணையாக இருப்பது தாயே, தந்தையே" என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பட்டிமன்றம் நடந்தேறியது. நடுவர் திருமுடி துளசிராமன் தனது சுவையான பேச்சுத் திறமையினால் இரண்டு குழுக்களையும் ஒருங்கிணைத்துத் தத்தம் வாதங்களை எடுத்துரைக்க அழைத்தார். தாயே என்ற தலைப்பில் நித்யவதி சுந்தரேஷ், சாந்தி,
கௌரி ஆகியோரும், தந்தையே என்ற தலைப்பில் முரளி ஜம்பு, கார்த்திக், சங்கர் ஆகியோரும் திறம் பட பேசினார்கள். தந்தைகளின் பொறுப்பின்மை, பொறுமையின்மை பற்றி தாய்மார்களும், தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் செல்லம், அக்கறையின்மை குறித்துத் தந்தைமார்களும் சுவையாக விவாதம் புரிந்தனர். சம காலத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் வாழ்வில் இருந்து சுவாரசியமான உதாரணங்கள் எல்லாம் காட்டி மிகத் திறமையாகப் பேசி அரங்கத்தினர் தொடர்ந்த கரவொலியையும் ஆதரவினையும் இரு தரப்பினரும் பெற்றனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சுந்தரேஷ் எழுதிய 'தமிழ் ஏன் கற்க வேண்டும்?' என்ற கட்டுரையும், இந்து மதம் பற்றிய 'உங்களுக்குத் தெரியுமா?' என்ற வினா விடை அடங்கிய கையேடும் வழங்கப் பட்டன. நன்றி
யுரையில் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், கலந்து கொண்ட அனைவருக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும், நிதியுதவி புரிந்த ஸ்பான்சர்களுக்கும் நன்றி தெரிவித்து அடுத்து வரும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அனைவரும் அமைப்புக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கக் கோரினார்.
பாரம்பரிய இசை, ஆடல், பாடல், கிராமியக் கலைகள்., நாட்டுப்புறக் கலைகள் எல்லாம் கலந்து தமிழ் நாட்டுக் கிராமம் ஒன்றில் இனிய முறையில் பொங்கலைக் கொண்டாடிய மகிழ்ச்சியினை நிகழ்ச்சி அளித்தது. நடனமும், இசையும், வாதப் பிரதிவாதங்களும் சேர்ந்து அன்றைய மாலைப் பொழுதினை ஒரு மறக்க முடியாத இனிய மாலைப் பொழுதாக மாற்றின. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் இறுதி வரை கலந்து கொண்டு ஏகோபித்த ஆதரவு அளித்து நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
பாரதித் தமிழ் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும், கோடை விடுமுறைகளின் பொழுது சி
றார்களுக்கான வகுப்புகளும் வழங்க இருக்கிறது. இந்த அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் விரும்புபவர்கள் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜனை 408 394 4279 என்ற எண்ணிலும் , bharatitamilsangam@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.
2008ம் ஆண்டு - பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சிபாரதி தமிழ் சங்கம் http://www.batamilsangam.org/ கடந்த இரு ஆண்டுகளாக சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கி வருகிறது. இந்து தர்மத்தினையும், இந்தியாவின் கலாச்சாரச் செழுமைகளையும், இந்துக்களின் பாரம்பரியங்களையும் வளைகுடாப் பகுதியில் வசிக்கும் தமிழர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சென்று வருகிறது. இந்துக்களின் பாரம்பரிய விழாக்களையும், பண்டிகைகளையும் அனைத்துத் தமிழர்களும் ஒன்று கூடிக் கொண்டாட ஒரு தளம் அமைத்துத் தந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், சித்திரைமாதத் தமிழ் வருடப் பிறப்பு, நவராத்ரி ஆகிய சிறப்பான நாட்களைதமிழ் நாட்டில் நடைபெறும் அதே உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும், வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழர்களும் கொண்டாடி மகிழ ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த அக்டோபர் மாதம் சன்னிவேல் இந்துக் கோவிலில் சொல்லின் செல்வர் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் நிகழ்த்திய திராவிட வேதம் ஒரு அறிமுகம் என்ற திவ்யப் பிரபந்த அறிமுக சொற்பொழிவினை, மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியினை வேதிக்ஸ்.நெட் அமைப்புடன் சேர்ந்து பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தொடர்ந்து இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைப் பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்து அளித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முக்கியமான பண்டிகையும், தீமைகளை அழித்து தர்மத்தினை நிலைநாட்டிய ஒரு முக்கியமான தினத்தின் கொண்ட்டாட்டமான தீபாவளித் திருநாளை வளைகுடாப் பகுதிதமிழ் மக்கள்களை ஒன்றிணைத்து மிகச் சிறப்பான முறையில் கொண்டாட இருக்கிறது. இந்துக்களின் முக்கியத் திருநாளாம் தீபத்திருநாளம் தீபாவளியை மங்களும் மகிழ்ச்சியும் பொங்க கொண்டாட இருக்கிறது.
வரும் நவம்பர் 2ம் தேதி மாலை மூன்று மணி முதல் இரவு 7 மணி வரை சிறுவர்களும், பெரியவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கும் கோலாகலமான தீபாவளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி சன்னிவேல் நகரில் உள்ள இந்துக் கோவில் அரங்கத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப் பட இருக்கிறது. நிகழ்ச்சியில் வளைகுடாப் பகுதியின் பிரபலமான இன்னிசை கச்சேரி ஒன்றும் இடம் பெற உள்ளது. நாட்டியம், வாய்ப்பாட்டு, வாத்யக் கருவிகள், சிறு நாடகங்களுடன் அற்புதமான ஒரு கொண்டாட்டமாக தீபாவளித் திருநாள் நடை பெறவிருக்கிறது. வளைகுடாப் பகுதி தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் திரண்டு வந்து இந்தத் தீபாவளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டும் என்று பாரதித் தமிழ் சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்கண்ட ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்
ராஜீவ் கண்ணா 510 491 5834 கோவிந்தராஜன் 408 394 4279 ஹரிஹரன் 510 383 6146
2009 ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கம் - பொங்கல் நிகழ்ச்சிகடந்த இரண்டு வருடங்களாக சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வெற்றிகரமாக இயங்கி வரும் பாரதி தமிழ் சங்கம் http://www.batamilsangam.org/ இந்து தர்மத்தினை அடியொற்றி இயங்கும் உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் சார்பாக பாரதப் பண்பாட்டின் செழுமையை விளக்கும் பல்வேறு பண்டிகைகளும் கொண்டாடப் பட்டு வருகின்றன. பல்வேறு சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 17ம் தேதி அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவிலின் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ் சங்கத்தின் சார்பாக பொங்கல் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. தனது வரவேற்புரையில் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், எவ்வாறு பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி என்ற பெயரில் அனைத்து இந்தியாவிலும் ஒரே விதத்தில் கொண்டாடப் படுகிறது என்பதையும், எவ்வாறு பொங்கல் விழா நம் பாரதப் பண்பாட்டை காஷ்மீர் முதல் குமரி முதல் ஒருங்கிணைக்கும் ஒரு கலாச்சார அடையாளத் திருவிழா என்பதையும் விளக்கினார்.
குழந்தைகள் ராஹுல் பரத்வாஜ், ஸ்நேகா கீதாகிருஷ்ணன், சூர்யா சுந்தரேஷ் ஒருங்கிணைந்து அற்புதமாகப் பாடிய கடவுள் வாழ்த்துடனும் செல்வி கீர்த்தனா ஸ்ரீகாந்த்தின் இனிய கடவுள் வாழ்த்துப் பாடலுடனும் பொங்கல் திருநாள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கர்நாடக இசைப் பாடல்கள், வாத்திய இசைகள், சேர்ந்திசைப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நடனங்கள் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. வளைகுடாப் பகுதி வளரும் இளம் தமிழ் கலைஞர்களின் சாதனைகளைப் அரங்கேறின.
கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் குழுவினர்களின் இனிய குரலில் சொளந்தர்ய லகரியின் தமிழ் வடிவப் பாடல்கள் பாடப் பெற்றன. நடராஜரைத் தொழுது சுகந்தா ஐயர் குழுவினர் வழங்கிய ஒருங்கிணைந்த நாட்டியம் காண்போரை மெய்மறக்கச் செய்தன. தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகவும் கடந்த மார்கழித் திருநாளைப் போற்றும் விதத்திலும், ஆண்டாளின் திருப்பாவைக்கு அற்புதமாக அபிநயம் செய்து ஒரு சிறப்பான பரத நாட்டிய விருந்தினை வழங்கினார் அஜிதா. அஜிதாவின் தனிப் பாடலைத் தொடர்ந்து மாடு மேய்க்கும் கண்ணா என்ற ஒரு காவடிச் சிந்து பாடலை அருமையாக நாட்டியத்தில் கொணர்ந்து சபையோரின் கரகோஷத்தை அள்ளிச் சென்றார் செல்வி ஷ்ருதி அரவிந்தன். பரத நாட்டியங்களைத் தொடர்ந்து கொஞ்சும் மைனாக்களே என்ற இனியத் திரை இசைப் பாடலைத் தன் நடனத்தினால் மெருகேற்றினார் செல்வி. ஹரிப்ரியா சுந்தரேஷ். பரத நாட்டியம், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளைத் தொடர்ந்து சிறுவர்கள் வாத்தியங்களில் தங்கள் திறமையினைக் காண்பித்தார்கள். செல்வன் விஷால் சாக்சோஃபோன் வாத்தியத்தில் மஹா கணபதி என்ற பாடலை வாசித்து தன் திறமையை வெளிக் காண்பித்தார். செல்வன் சுபாஷ் ரமேஷ் பல சினிமாப் பாடல்களின் துடிப்புக்களை தன் அற்புதமான டிரம்ஸ் வாசிப்பில் நிகழ்த்திக் காண்பித்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் டாக்டர் கல்பகம் கொளசிக் அவர்கள் ஒரு சிறிய விநாடி வினா நிகழ்ச்சி ஒன்றினை வழங்கி தமிழ் நாட்டில் இருந்து சாதனை படைத்த பல அறிஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்கினார்கள். தீபா மஹாதேவன் மற்றும் கல்பகம் கவுசிக் இணைந்து அம்புஜம் கிருஷ்ணன் அவர்கள் இயற்றிய ஆண்டாள் திருக்கல்யாணப் பாடல்களை தங்கள் அருமையான குரல் வளத்தில் பாடினார்கள். செல்வன் ஹரிஹரன் சுப்புராஜ் பல்வேறு சுலோகங்களை அழகாகப் பாடினார்
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பல் வேறு வகையிலான பொங்கல்களும், பிற சிற்றுண்டிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. அடுத்ததாக வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி அன்று சன்னிவேல் இந்துக் கோவிலில் வைத்து வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு தினத்தை பாரதி தமிழ் சங்கம் மிகவும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு பாரதி தமிழ சங்கத் தலைவர் கோவிந்தராஜன் அவர்களை 408 394 4279 என்ற எண்ணிலும் சுந்தர் அவர்களை 408 390-5257 என்ற எண்ணிலும் அணுகலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், விபரங்கள் அறியவும் bharatitamilsangam@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலா
2009ம் ஆண்டு - பாரதி தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த விரோதி வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் கொண்டாடப் பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிகமாக தமிழ் நாட்டில் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டாலும், தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டின் அடியொற்றியும் தமிழ் முன்னோர்களின் மூத்த கலாசார முறைமைப்படியும், பாரதி தமிழ்ச் சங்கம் சித்திரை மாதத்திலேயே தமிழ் புத்தாண்டான விரோதி வருடத்தை வரவேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. ஏப்ரல் 25ம் தேதி, சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை, பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இயல், இசை, நாடகமாகிய முத்தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்ட சித்திரைத் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தார்கள்.
பூர்ணிமா ரெங்கராஜன் அவர்களின் இனிய குரலில் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கப் பட்டது. நிகழ்ச்சியினை இட்ஸ்டிஃப் வானொலியினை (www.itsdiff.com) நடத்தி வரும் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா அவர்கள் தொகுத்து வழங்கினார். சிறுவன் வருண் தமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்பது குறித்தும், விரோதி வருடத்தின் சிறப்புக்கள் குறித்தும் பேசி புது வருடத்தில் அனைவரும் அனைத்து நலன்களும் பெற வேண்டினார் . கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அனைவருக்கும் ஏன் தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குகிறது என்பதற்கான பூகோள முக்கியத்துவங்களையும், கிரக நிலைக் கணக்குகளையும் எளிமையாக விளக்கும் கார்ட்டூன் படங்களினால் ஆன ஒரு கையேடு வழங்கப் பட்டது. சித்திரை மாதத்தில் புது வருடம் துவங்கும் காலக்கணக்கின் பொருளை, அறிவியல் பூர்வமாகவும், விவசாயம் மற்றும் வானவியல் ரீதியாகவும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முன்பாக வான சாஸ்திரங்களில் சிறந்த நம் முன்னோர்களின் கணக்கிட்ட விதத்தை அக்கையேடு எளிமையாக விளக்கியது.
நிகழ்ச்சியில் தொடர்ந்து கீர்த்தனா ஸ்ரீகாந்த், வைஷ்ணவ பிரபு, ரேணுகா மோகன் குமார், வசுதா ஐயர் ஆகியோர் வழங்கிய கர்நாடக இசைப் பாடல்கள் அரங்கேறின. வளர்ந்து வரும் டிரம்ஸ் வாத்ய இளம் இசைக் கலைஞர் சுபாஷ் ரமேஷ் சில பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்தார். ராஜலஷ்மி வழங்கிய சிறப்பான வீணை இசை தொடர்ந்தது. பாடல்களையும் வாத்திய இசைக் கச்சேரிகளையும் தொடர்ந்து சாஸ்த்ரீய நடனங்கள் கலந்து கொண்டோரின் பெரும் வரவேற்பைப் பெற்றன. தீபா மகாதேவனின் மாணவியான ஷ்ருதி அரவிந்தன் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாரதியார் பாடலுக்கு பரத நாடியமும், மணீஷா நல்லமுத்து ப்ரூச்சேவா என்ற பாடலுக்கு குச்சுப் புடி நடனமும், ப்ரியா ராஜகோபால் அவர்களின் மாணவிகளான ப்ரியா சுப்ரமணியன், ஷோபனா கங்காதரன் இருவரும் பல்வேறு பாரதி பாடல்களுக்கு நிகழ்த்திய பரத நாட்டிய நடனமும், நாத விநோதமும் என்ற பாடலுக்கு அஜிதா ஆடிய பரத நாட்டியமும், ஸ்ருதி ஸ்வரலயா வித்யா வெங்கடேசன் மாணவியான ஸ்ரீவித்யா ராஜனின் பந்தாட்ட நடனும் காண்போர் அனைவரையும் கவர்ந்து ஏகோபித்தப் பாராட்டுக்களைப் பெற்றன. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு ஆடப் பட்ட நடனங்கள் வெகு அற்புதமான நடனங்களகாக அமைந்து அவையினரை மெய்மறக்கச் செய்து பலத்த கரகோஷத்தினைப் பெற்றன.
தனி இசைகளையும், நடனக்களையும் தொடர்ந்து சிறுவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு வழங்கிய சேர்ந்திசை நடனங்கள் அரங்கேறின. பானுப்ரியா அவர்கள் இயக்கி வழங்கிய சம்திங் சம்திங் என்ற பாடலுக்கான ஒத்திசைந்த நடனத்தில் ஆடிய சிறுவர்கள் ஒபாமாவின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடலை மாற்றி நடனமாடினார்கள். அதை அடுத்து ஆரத்தி ஷங்கர் இயக்கிய சிறுவர் குழுவினரின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. சிவசுந்தரி ராஜராஜன் அவர்களின் சிறுவர் குழுவும் ஆர்த்தி சஞ்சய் அவர்கள் குழுவும் இரண்டு திரையிசைப் பாடல்களுக்கு குழு நடனம் ஆடினர். நித்யவதி சுந்தரேஷ் இயக்கத்தில் ’அஞ்சாத சிங்கம் என் காளை’ பாடலுக்கான நடனமும் மேலும் திரையிசைப் பாடலுக்கு ஆடப் பட்ட ஒரு குழு நடனமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. சிவசுந்தரி ராஜாராஜன் மற்றும் சாந்தி சாம்பசிவன் அவர்களின் இயக்கத்தில் சிறுவர்கள் குடையுடன் வந்து ஆடிய மேகம் கருக்குது, சின்ன சின்ன மழைத்துளி ஆகிய மழைப் பாடலுக்கான குழு நடனம் அனைவரின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றது. பொதுவாகவே அனைத்து குழு நடனங்களுமே தமிழ் திரைப்படப் படங்களில் வரும் சிறப்பான குழு நடனங்களை மிஞ்சும் வண்ணம் வண்ணமயமாகவும், மிக நேர்த்தியான ஒத்திசைந்த அடிகளுடனும், உடைகளுடனும், முக பாவனைகள், அபிநயங்களுடனும் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. காயத்ரி ராமநாதன், ராஜேஷ்வரி ராமநாதன் ஆகியோர் தங்களது தனித்தன்மையான குரல் வளத்தில் வழங்கிய பாடல்களும் அவையினரை வெகுவாகக் கவர்ந்தன. சகோதரிகள் இருவரும் தனியான இசை ஆல்பங்கள் உருவாக்கும் அளவுக்கு சிறப்பான குரல் வளம் படைத்திருந்தனர். கொளரி சேஷாத்ரி இயக்கத்தில் சிறுவர்கள் கலந்து கொண்ட நாடகம் ஒன்றும் இடம் பெற்றது. சிறுவர்களின் சுத்தமான தமிழ் உச்சரிப்புக்களும், நடிப்பும் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றன. சிறுவர், இளைஞர்களின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விரோதி வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியான பட்டி மன்றம் நடை பெற்றது. “குடும்ப மகிழ்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பவர்கள் மனைவியே, கணவனே” என்ற சுவாரசியமான விவாதம் பட்டி மன்றத்தின் கருப் பொருளாக விவாதிக்கப் பட்டது. தமிழ் ஆர்வலரும், வளைகுடாப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பைத் தந்து கொண்டிருப்பவருமான இளங்கோ மெய்யப்பன் அவர்கள் நடுவராகக் கலந்து கொண்டார். மனைவியே என்ற தலைப்பில் சாந்தி சாம்பசிவம், கோமதி, நித்யவதி சுந்தரேஷ் ஆகியோரும், கணவனே என்ற அணியில் திருமுடி, ஷங்கர், கௌரி சேஷாத்ரி ஆகியோரும் கலந்து கொண்டு தத்தம் அணியினரின் விவாதங்களை மிகத் திறமையாகவும், நகைச்சுவையுடனும், தர்க்கபூர்வமான ஆதாரங்களுடனும் கம்பீரமான இனிய தமிழில் பேசி அவையினரின் கரகோஷங்களைப் பெற்றார்கள். இரு அணியினரும் நிகழ்கால சம்பவங்களையும், தலைவர்களையும், தத்தம் தரப்பிற்கு ஆதரவாக இழுத்துப் பேசியது சுவாரசியமான ஒரு விவாதத்தை உருவாக்கி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர். கல்ந்து கொண்ட அனைவரும் மிகச் சுத்தமான தமிழ் உச்சரிப்புடனும், சிறப்பான குரல் வளத்துடனும் பேசினார்கள். நடுவர் இளங்கோ மெய்யப்பன் அவர்களின் துவக்க உரையும், இறுதித் தீர்ப்பும், ஒவ்வொரு அணியினரையும் ஊக்குவித்துப் பேசிய பேச்சுக்களும் இனிய தமிழில் மிக அருமையாக அமைந்திருந்தன. 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அரங்கு நிறைய அமர்ந்து ரசித்த இந்தபட்டிமன்றம் அருமையான செவிக்குணவாக அமைந்தது.
இயல், இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒரு நகைச்சுவை நாடகமும் அரங்கேறியது. வெங்கடேஷ், சாய் ஷங்கர், வெங்கடாச்சலம், அஷ்வின், லஷ்மி, வித்யா, ஷ்யாம், பானு, வாசு, ராஜா ஆகியோர் அடங்கிய குழு வாய் விட்டு சிரிக்க வைத்த இந்த நகைச்சுவை நாடகத்தினையும் வழங்கி அத்துடன் அற்புதமான திரையிசைப் பாடல்களையும் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பல இளம் திறமைகள் இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தினையும், பாராட்டுதல்களையும் பெற்றனர்.
வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ்ச்சமுதாத்தின் அனைத்து தனித்துவமான திறமைகளுக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் கட்டற்றதொரு மேடை வழங்கி அவர்களது திறமைகளையும் தன்னம்பிக்கைகளையும் தொடர்ந்து வளர்த்து வரும் தொண்டு, கலந்து கொண்ட அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றது.
தமிழ் புத்தாண்டினைத் தொடர்ந்து பாரதி தமிழ்ச் சங்கம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து விரிகுடாப் பகுதி தமிழர்களுக்காக வழங்க உள்ளது. இவ்வரிசையில், வரும் ஜூன் மாதம் ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பேரன்களான நாதஸ்வர இசை மேதைகள் ஷேக் சின்னமௌலானா காசீம், பாபு ஆகியோரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் சில இலக்கிய நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி வாழ் தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்கள் நல்லாதரவினை பாரதித் தமிழ்ச் சங்கத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு நல்கி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். வரவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கும், பாரதி தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.
கோவிந்தராஜன்: 408-394-4279
ஹரிஹரன்: 510-383-6146
சுந்தர்: 408-390-5257
மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com
இணைய தளம்: www.batamilsangam.org
2009ம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் நிகழ்ச்சி
சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது நிகழ்ச்சிகள்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கலந்து கொள்ளும் இரு நிகழ்ச்சிகள் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நிகழவுள்ளன.
நிகழ்ச்சி-1 வாசகர் சந்திப்பு, கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல்
நாள்: ஆகஸ்ட் 30, ஞாயிறு
நேரம்: மாலை 2 முதல் 5 மணி வரை று
இடம்: India Harvest Restaurent
4161 Cushing Pkwy
(at E Northport Loop)
Fremont, CA 94538
(510) 770-9838
நிகழ்ச்சி-2 எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பாரதி தமிழ் சங்கம் வழங்கும் வரவேற்பு. மற்றும் எழுத்தாளரரின் உரை. கேள்வி பதில்
நாள்: செப்டம்பர் 5, சனிக் கிழமை
நேரம்: மதியம் 2 முதல் 5 மணி வரை
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம்
Stevenson Blvd and Paseo Padre intersection Fremont, CA
பாரதி தமிழ் சங்கம்
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை
தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ் சங்கம் வரவேற்று கவுரவிக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை
இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம்
நேரம்
: மாலை 2:00 -5:00
அனுமதி
: இலவசம்
நவீனத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான ஜெயமோகன் பன்முக ஆளுமை படைத்தவர். 1990 வருடம் வெளி வந்த அவரது ரப்பர் என்ற நாவல் அவர் மீது தமிழ் இலக்கிய உலகின் முழுக் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றார். தொடர்ந்து அவரது முக்கியமான நாவலாகிய விஷ்ணு புரம் மாபெரும் வரவேற்பையும், கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று தமிழின் முக்கியமான படைப்பானது. பின் தொடரும் நிழலின் குரல், காடு, கன்யாகுமரி, ஏழாவது உலகம், கொற்றவை ஆகிய பெரும் நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
ஜெயமோகன் தமிழ் திரைப்பட உலகத்திலும் முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகிறார். அவரது ஏழாவது உலகம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குனர் பாலா இயக்கிய "நான் கடவுள்"திரைப்படத்தில் ஜெயமோகன் அவர்களின் கூரிய வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து திரைத்துறையில் பல படங்களிலும் ஜெயமோகன் பங்களித்து வருகிறார்.
தத்துவம், வரலாறு, பயணம், நகைச்சுவை, இலக்கியம், என்று பரந்துபட்ட தலைப்புகளில் தன் சிந்தனைகளை தனது இணைய தளமான www.jeyamohan.in மூலமாக பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
வரும் சனிக்கிழமை, செப் 5ம் தேதி ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் திரு.ஜெயமோகன் தமிழ் இலக்கியத்திற்கும், இந்திய மரபுகளுக்கும் ஆற்றி வரும் தொண்டினைப் பாராட்டி வளைகுடாப் பகுதி தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கவுரவிக்க இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக.
2009ம் வருடம் பாரதி தமிழ் சங்கம் வழங்கிய எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டம் மற்றும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிபாரதி தமிழ் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வரும்தமிழ் கலாச்சார அமைப்பாகும். பாரதி தமிழ் சங்கத்தின் சார்பாக கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஃப்ரீமாண்ட் நகர மைய நூலகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கவுரவிக்கப் பட்டார். எழுத்தாளரை ச.திருமலைராஜன் அறிமுகப் படுத்தினார். வளைகுடாப் பகுதியின் எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சகர்களுமான பாலாஜி ஸ்ரீநிவாசன், சுந்தரேஷ் இருவரும் ஜெயமோகனது விஷ்ணு புரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகிய இரு நாவல்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தையும் மதிப்புரையையும் வழங்கினார்கள். அரங்கு நிறைந்த அந்தக் கூட்டத்தில் ஜெயமோகன் கருத்தாழமிக்க ஒரு சொற்பொழிவினை நிகழ்த்தினார். பாரதக் கலாச்சாரத்தின் பெருமைகள், அந்நியர் ஆட்சியில் பாரதம் கண்ட தொய்வு,நம் முன்னோர்களின் தொன்மையான அறிவு, எதிர்கால நம்பிக்கைகள் என்பது குறித்து விரிவான ஒரு பேருரையை வழங்கினார். மாபெரும் பாரதப் பண்பாட்டின் சாரம் குறித்து அவர் அன்று வழங்கிய ”மூதாதையர் குரல்” என்ற அற்புதமான உரையை அவரது வலைத் தளத்தில் http://jeyamohan.in/?p=3891 படிக்கலாம். உரையைத் தொடர்ந்து கலந்துகொண்டோர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கினார். நிகழ்ச்சி முடிந்த பின்பும் நீண்ட உரையாடல்கள் தொடர்ந்தன.
கடந்த அக்டோபர் 18ம் தேதி அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள சன்னிவேல் இந்துக் கோவிலின் அரங்கில், பாரதி தமிழ் சங்கத்தின் சார்பாக தீபாவளித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. தனது வரவேற்புரையில் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், தீபாவளித் திருநாளின் முக்கியதுவம் குறித்தும் அந்தப் பண்டிகை பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான திருவிழாவாக இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது என்பதையும் தீபாவளிப் பண்டிகை எவ்வாறு நம் பாரதப் பண்பாட்டை காஷ்மீர் முதல் குமரி முதல் ஒருங்கிணைக்கும் ஒரு கலாச்சார அடையாளத் திருவிழா என்பதையும் விளக்கினார்.
கொளரி சேஷாத்ரி பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியை திரு.திருமுடி ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்களும், வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர்ந்தனர். கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் கல்பகம் கவுஷிக் அவர்கள் சங்கீத இசைக் குயில்களான டி.கே.பட்டமாள், எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எஸ்.சுப்புலஷ்மி ஆகியோர் நினைவாக அவர்கள் பாடிய பிரபலமான பாரதிபாடல்களை அருமையாகப் பாடி இசை மேதைகளுக்கு அஞ்சலி செலுத்தினார். கல்பகம் அவர்களது மாணவரான திரு.பர்ட்டன் வின் என்னும் அமெரிக்கர் மிக அருமையாக மூன்று கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி அவையோர்களின் எகோபித்த கரகோஷங்களைப் பெற்றார். ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் சார்பில் சுதர்ஷன யோகா குறித்த ஒரு அறிமுகத்தினை அளித்தார்கள். ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளங்களில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சேவை அமைப்பான சேவா பாரதி செய்து வரும் உதவிகளை ஒரு குறும் படம் மூலம் விளக்கினார்கள் அந்த அமைப்பிற்காக நிதியுதவி செய்யக் கோரினார்கள் சேவா பாரதி அமைப்பினர்.
நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்ட ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளையும், சேவை அமைப்பினர்களின் அறிவிப்புக்களையும் தொடர்ந்து தீபாவளி நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்ச்சியான சங்கமம் குழுவினர் அளித்த வாரணம் என்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. வளைகுடாப் பகுதியில் வசிக்கும் கார்னீகி மெலன் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பலரும் இணைந்து சங்கமம் என்றொரு கலை அமைப்பினைத் துவக்கி, மெல்லிசைப் பாடல்கள், நகைச்சுவை நாடகங்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள். திறமையும், ஆர்வமும், கலைத் திறனும், அபாரமான கற்பனா சக்தியும், நகைச்சுவை உணர்வும், இசைத் திறனும் இணைந்த பன்முகத் திறமை வாய்ந்த இளைஞர்களால் நடத்தப் பட்டு வரும் சங்கமம் கலைக் குழுவினர் தீபாவளி நிகழ்ச்சியில் அற்புதமான ஒரு பல்சுவை நிகழ்ச்சியை வழங்கினார்கள். ஒரு நகைச்சுவை நாடகத்தின் ஊடாக பிரபலமான தமிழ் திரை இசைப் பாடல்களை இசைத்து அதற்கு அருமையாக நடனும் ஆடினார்கள். நாடகத்தின் வசனங்கள் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தன. சங்கமம் குழுவினர் இனிய குரலில் பாடியதுடன் சிறப்பான நடன ஒருங்கிணைப்புடன் நடனமும் ஆடினார்கள். நடிப்பு, பாடல், நடனம், சிரிப்பு என்று மறக்கவியலாத ஒரு அருமையான பொழுது போக்கினை சங்கமம் குழுவினர் இந்த தீபாவளி நிகழ்ச்சியில் அளித்தனர். பாரதி தமிழ் சங்கம் வழங்கிய தீபாவளி நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தியாவில் தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சியினை அளித்தது.
வரவிருக்கும் ஜனவரி மாதம் பாரதி தமிழ் சங்கம் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடவுள்ளது. சிறுவர்களுக்கான போட்டிகள் சிலவும் நடத்தவுள்ளது. மேலதிகத் தகவல்களுக்கு பாரதி தமிழ சங்கத் தலைவர் கோவிந்தராஜனை 408 394 4279 என்ற எண்ணில் அணுகவும்.
2010ம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நிகழ்ச்சி
பாரதி தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்ச்சி
----------------------------------------------------------------------------------
கடந்த மூன்று ஆண்டுகளாக சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வெற்றிகரமாக இயங்கி வரும்பாரதி தமிழ் சங்கம் http://www.batamilsangam.org/ பாரதப் பண்பாட்டின் கலாச்சாரத்தை வளைகுடா பகுதி தமிழ்இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் தொடர்ந்து எடுத்துச் செல்லு விதமாக நமது பாரம்பரியப் பண்டிகைகளையும், விழாக்களையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவிலின் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ் சங்கத்தின் சார்பாக பொங்கல் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. பொங்கல் விழா நம் பாரதப் பண்பாட்டை காஷ்மீர் முதல் குமரி முதல் ஒருங்கிணைக்கும் ஒரு கலாச்சார அடையாளத் திருவிழா என்பதைக் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
செல்வி கீர்த்தனா ஸ்ரீகாந்த்தின் இனிய கடவுள் வாழ்த்துப் பாடலுடனும் பொங்கல் திருநாள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கர்நாடக இசைப் பாடல்கள், வாத்திய இசைகள், சேர்ந்திசைப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நடனங்கள் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. வளைகுடாப் பகுதி வளரும் இளம்தமிழ் கலைஞர்களின் சாதனைகளைப் அரங்கேறின
கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து சிவசுந்தரி ராஜராஜன் இயக்கத்தில் குழந்தைகள் பங்கு கொண்ட குழு நடனம், கீதா சேஷாத்ரி ஒருங்கிணைப்பில் 29 குழந்தைகள் ஒன்று சேர்ந்து பாடிய கர்நாடக ஒத்திசைப் பாடல்கள், தீபா மகாதேவன் குழுவினரின் இரு குழு பரத நாட்டியங்கள், கீதா சேஷாத்ரி இயக்கிய ஒத்திசைந்த வயலின் வாத்ய கச்சேரிகள், அகிலா ஐயர் குழுவினரின் பாடல்கள், நிகிலேஷ் பாஸ்கர் பாடல், நித்யவதி இயக்கத்தில் குழு நடனங்கள், பவித்ரா நடராஜன், ஷ்ருதி அரவிந்தன் ஆகியோரின் தனி நடனங்கள், கல்பகம் கவுசிக் அவர்களின் மாணவர்களது இசை நிகழ்ச்சிகள், ஸ்ரீவத்சன், சித்தார்த் பாடல்கள், தமிழ்வாணன் பொன்னுசாமி குழுவின் நிகழ்ச்சி, அஜிதாவின் பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் அரங்கேறின. பொங்கல் விழாவில் தமிழ் நாட்டின் பாரம்பரியக் கலைகள் அனைத்தையும் வளைகுடாப் பகுதி இளம் கலைஞர்கள் நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியை இந்த முறை ஹரிப்ரியா சுந்தரேஷ் மற்றும் சூர்யா சுந்தரேஷ் இருவரும் அழகிய தமிழில் பேசி ஒருங்கிணைத்து நடத்தினார்கள்
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பல் வேறு வகையிலான பொங்கல்களும், பிற சிற்றுண்டிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன
பாரதி தமிழ் சங்கம் 2010-11 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகக் குழுவினரையும் தேர்ந்தெடுத்துள்ளது. ராகவேந்திரன் நாகராஜன் தலைவராகவும், திருமுடி துளசிராம் செயலாளராகவும், வாசுதேவன் நஞ்சன்கூட் பொருளாளராகவும் பொதுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்
அடுத்ததாக வரும் மே 1ம் தேதி, சனிக் கிழமை அன்று சன்னிவேல் இந்துக் கோவிலில் வைத்து வரவிருக்கும்தமிழ் புத்தாண்டு தினத்தை பாரதி தமிழ் சங்கம் மிகவும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்களோ, உங்கள் குழந்தைகளோ, உங்கள் கலைப் பள்ளி மாணவர்களோ கலந்து கொண்டு சிறப்பிக்க விரும்புபவர்கள் பாரதி தமிழ சங்க நிர்வாகிகளை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்,
ராகவேந்திரன் 785 979 5497
வாசுதேவன் 650 868 0510
2010 ஆம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி
சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விக்ருதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த விக்ருதி வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் கொண்டாடப் பட்டு வந்த தமிழ்ப் புத்தாண்டு அரசியல் காரணங்களுக்காகத் தற்காலிகமாக தமிழ் நாட்டில் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டாலும், தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டின் அடியொற்றியும் தமிழ் முன்னோர்களின் மூத்த கலாசார முறைமைப்படியும், பாரதி தமிழ்ச் சங்கம் சித்திரை மாதத்திலேயே தமிழ் புத்தாண்டான விக்ருதி வருடத்தை வரவேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. கடந்த மே 1ம் தேதி, சனிக்கிழமை அன்று சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை, பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இயல், இசை, நாடகமாகிய முத்தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்ட சித்திரைத்தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தார்கள்.
கல்பகம் கவுசிக் அவர்களின் கடவுள் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழாவில் முதலில் விக்ருதி ஆண்டை வரவேற்று ஏராளமான குழந்தைகள் சேர்ந்திசைத்த ஒரு கூட்டுப் பாடல் பாடப் பட்டது. நிகழ்ச்சியினை பாரதிதமிழ் சங்கத்தின் செயலர் திருமுடி மற்றும் கொளரி தொகுத்தளித்தனர். பாரதி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடப் படுவதின் அவசியம் குறித்தும் பேசினார்கள். தொடர்ந்து தேவ்ராம், திருவாசகம், ஆழ்வார் பாடல்கள் என்று பல்வேறு தெய்வீக இசைகள் கர்நாடக இசைப் பாட்டுக்களாக ஏராளமான இளம் கலைஞர்களால் வழங்கப் பட்டன. வாத்தியங்கள் வாய்ப்பாட்டுக்கள் ஆகிய கச்சேரிகளைத் தொடர்ந்து அற்புதமான பரத நாட்டிய நடனங்கள் பல அரங்கேறின. கிட்டத்தட்ட 185 சிறுவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்ட பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. தீபா மஹாதேவன், இந்துமதி கணேஷ், ப்ரியா ராமதாஸ், அகிலா ஐயர், ஷாலினி, கொளரி, ராமா ராஜ், நித்யவதி, கீதா சேஷாத்ரி, ஸ்வரலயா ஆகியோரின் மாணவர்கள் நிகழ்த்திய பரத நாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற நடனங்கள், வயலின், வீணை இசை, பிற நடனங்கள், சிறு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவை நிகழ்த்தப் பட்டன. 185 சிறுவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு தங்கள் கலைத் திறனை பாரதி தமிழ்சங்கம் அளித்த புத்தாண்டு விழா மேடையில் வெளிக் கொணர்ந்தனர். திருச்சிற்றம்பலம் நாட்டியப் பள்ளியை நடத்தி வரும் தீபா மகாதேவன் தன் மாணவிகளுடன் கலந்து கொண்டு அற்புதமான ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியையும் அளித்தார்.
சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் அளித்த ஏராளமான கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சங்கமம் குழுவினர் வழங்கிய நகைச்சுவை நாடகத்துடனும், நடனங்களுடனும் கூடிய இன்னிசை நிகழ்ச்சியும் அரங்கேறியது. வெங்கட் குழுவினரின் சங்கமம் அமைப்பு வளைகுடாப் பகுதியில் வசிக்கும் பன்முகக் கலைத் திறன் கொண்ட இளைஞர்களைக் ஒருங்கிணைத்து ஒரு நாடகம் வழியாக அருமையான பல பாடல்களை ஆர்ப்பாட்டமான நடனங்களுடன் கலந்தளித்தனர். சங்கமம் குழுவினரின் ஆடலும் பாடலும் பெருக் கரகோஷத்துடன் கூடிய வரவேற்பை பெற்றது.
வந்திருந்த அனைவருக்கும் பாரதித் தமிழ்ச் சங்கம் தயாரித்திருந்த விக்ருதி தமிழ் புத்தாண்டு விழா மலர் அளிக்கப் பட்டது. விழா மலரில் சித்திரை மாத வருடப் பிறப்பைப் பற்றிய கட்டுரை ஒன்றும், தமிழறிஞர் ஓகை நடராஜன் அவர்கள் எழுதிய தை மாத வருடப் பிறப்பு தமிழ் மரபன்று என்ற கட்டுரையும் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பாரதி தமிழ் சங்க விழாவில் பேசிய ”மூதாதையார் குரல்” என்ற உரையும், எனது இந்தியா என்ற கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன.
வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ்ச்சமுதாத்தின் அனைத்து தனித்துவமான திறமைகளுக்கும் பாரதி தமிழ்ச்சங்கம் கட்டற்றதொரு மேடை வழங்கி அவர்களது திறமைகளையும் தன்னம்பிக்கைகளையும் தொடர்ந்து வளர்த்து வரும் தொண்டு, கலந்து கொண்ட அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றது.
தமிழ் புத்தாண்டினைத் தொடர்ந்து பாரதி தமிழ்ச் சங்கம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ பகுதி தமிழர்களுக்காக வழங்க உள்ளது. இவ்வரிசையில், ஜூன் மாதம் டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி, தியாகி கக்கன் அவர்களின் சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் பொருளாதாரம், பாரதக் கலாச்சாரம் குறித்து அளிக்க இருக்கும் சொற்பொழிவுகளையும், ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்குமான பல்வேறு போட்டிகளையும் பாரதி தமிழ்ச் சங்கம் அளிக்க உள்ளது. சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி வாழ் தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்கள் நல்லாதரவினை பாரதித் தமிழ்ச் சங்கத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு நல்கி, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். பாரதி தமிழ்ச் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். வரும் மாதங்களில்பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கும், பாரதி தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்
ராகவேந்திரன் 785 979 5497
வாசுதேவன் 650 868 0510
பாரதி தமிழ்ச் சங்கத்தின் மின்னஞ்சல் முகவரி: bharatitamilsangam@yahoo.com
2010 ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி நிகழ்ச்சி - தனிமை மேடை நாடகம்
பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - க்ரியாவின் தனிமை மேடை நாடகம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து நவம்பர் மாதம் 6ம் தேதி ”தனிமை” மேடை நாடகத்தினை அரங்கேற்றினார்கள்
தீபா ராமானுஜம், ராமனுஜம் தம்பதியினர், மற்றும் அவர்களின் நண்பர் நவீன் நாதனால் 2001ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கப்பட்ட க்ரியா நாடகக் குழு இந்திய பாரம்பரிய நாடகக் கலையின் செழுமையை அடித்தளமாகக் கொண்டு தரமான, அனைவரும் ரசிக்கக் கூடிய நாடகங்களை வழங்கி வருகிறார்கள்.
பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி வாழ் தமிழ்குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைத்திறனை ஊக்கப் படுத்தி அவர்கள் திறமைகளை வளர்க்கும் பொருட்டு கடந்த நான்கு வருடங்களாக கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன் இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகளைகளையும் சிறப்பான முறையில் கொண்டாடி வரும் அமைப்பாகும்.
இந்த வருடம் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக க்ரியா நாடக நிறுவனத்துடன் இணைந்து க்ரியாவின் தனிமை மேடை நாடகத்தை அரங்கேற்றியிருந்தார்கள். ஃப்ரீமாண்ட் ஓலோன் கல்லூரி அரங்கில் நவம்பர் 6, சனிக்கிழமை மதியம் 2 மணிக்கும் மீண்டும் மாலை 6 மணிக்கும் இரண்டு முறை தனிமை நாடகம் அரங்கு நிறைந்த காட்சிகளாக அரங்கேற்றப் பட்டு இப்பகுதி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பகுதி தமிழர்கள் தீபாவளி மறுநாள் ஒரு அருமையான, நாடக அனுபவித்தினை ரசித்துப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்த நாடகம் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கத் தகுந்த ஒரு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நாடகத்தினை கண்டு ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் பாரதி தமிழ்ச் சங்கத்தினர் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றார்கள். சங்கத்தின் தலைவர் ராகவேந்திரன் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து சங்கத்தின் நோக்கங்களையும் தெளிவாக விளக்கினார். செயலர் திருமுடி நன்றி அறிவித்தார்
க்ரியா குழு மட்டுமே 2005லிருந்து தொடர்ந்து வருடா வருடம் அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்று நாடகங்களை மேடையேற்றி வருகிறது. எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதி, தீபா ராமானுஜத்தின் இயக்கத்தில் உருவான தனிமை அதன் முதல் அரங்கேற்றம் முதல் இன்று வரை அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலும் சென்னையிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும் வரவேற்பை பெற்று வரும் ஒரு நாடகமாகும். கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் 25 வரை சென்னை நகரின் பல்வேறு புகழ் பெற்ற சபாக்களில் தினமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடை பெற்று சென்னை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெரும் பாராட்டினையும் பெற்ற நாடகம் தனிமை
தனிமை நாடகத்தின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை சித்திரங்களாகத் தீட்டும் கதையமைப்பும், நடிகர்களின் இயல்பான சிறப்பான நடிப்பும், கூர்மையான கலகலப்பான வசனங்களும், தீபா ராமானுஜத்தின் இயக்கமும், ஆனந்த் ராகவ்வின் எழுத்தும் விகடன், கல்கி, தி ஹிந்து, தினமலர் போன்ற அனைத்து தமிழகப் பத்திரிகைகளாலும் பெரிதும் பாரட்டப் பட்டுள்ளது. சென்னை வாழ் நாடக ரசிகர்கள், சினிமா கலைஞர்கள், இயக்குனர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. சமீப காலத்தில் வேறு எந்தவொரு தமிழ் நாடகமும் பெறாத புகழையும், கவனிப்பையும், பெற்ற நாடகம் தனிமை என்று கூறினால் அது மிகையாகாது.
உறவுகளின் எதிர்ப்பையும் மீறி தனக்கு தனிக்குடித்தனமே ஏற்றது என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேறும் மணி, தனக்கு வயதாகி உடல் தளர்ந்து, தன் பிள்ளைகள் திசைக்கொருவராய் பிரிய முதுமையில் தனிமையில் வாடும் பொழுது தன் கூட்டுக்குடும்ப வாழ்வை கண்ணீருடன் நினைத்துப் பார்க்கிறார். முதுமை உணர்விலும் தனிமையிலும் மன நோயிலும் உடல் நலம் குன்றியும் தவிக்கும் மணிக்கு அவரது வயதையொத்த உற்சாகமான இளமை மனதுடன் அறிமுகமாகிறார் ஸ்ரீதர். தனக்கு ஈடுபாடுள்ள பொழுது போக்குகள் மற்றும் தொழில்களில் மும்முரமாக ஈடுபட்டு முதுமையையும் தனிமையையும் துரத்தும் ஸ்ரீதர் மணிக்கும் அந்த ரகசியத்தை அறிமுகப் படுத்துகிறார். முதுமையில் நம்பிக்கையோடும் ,மகிழ்ச்சியாயும் வாழ்வது நம் கையில்தான் உள்ளது என்றும் கூறுகிறார். ஸ்ரீதரின் ஆலோசனைகளுடன் தன் வாழ்க்கை முறைகளை மாற்றி தனிமையையும் முதுமையையும் வென்று உற்சாகத்துடன் வாழ்வின் பிற்பகுதியை எதிர் கொள்வதே தனிமை நாடகக் கரு.
நாடகம் முழுவதும் பல காட்சிகள் ரசிகர்களின் வாழ்வுடன் ஒன்றியிருந்தமையினால் அவர்களை நெகிழ்வித்து கலங்கவும் சிரிக்கவும் வைத்தன
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுடுத்து தனிமை என்பதை உணராமல் அன்பாகவும், கலகலப்புடனும், ஒற்றுமையுடனும் வாழும் அக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்று நம் வாழ்வில் இருந்து காணாமல் போன ஒன்றாகும். அந்த மகிழ்ச்சியான கூட்டுக்குடும்பத்தை மேடையில் கண்ட ரசிகர்கள் நாம் இழக்க நேர்ந்த அற்புதமான ஒரு வாழ்வு முறையை எண்ணி ஏக்கம் அடைந்தனர். நாற்காலியில் அப்பா , தரையில் சித்தப்பா, குழந்தைகள் ,இதர உறவுகள் என உட்கார்ந்து சாப்பிட அம்மாவும், மணியின் மனைவியும் பரிமாறும் தருணத்தில் தான் வேலை காரணமாய் பட்டணம் போகப் போவதாய் மணி அறிவிப்பதும் அதைத் தொடர்ந்து பூகம்பமாக குடும்பத்துக்குள் ஏற்படும் பிரிவினைகளும், மணி தான் வெளியேறுவதில் உறுதியாய் இருப்பதாகச் சொல்லிப் பேசும் வசனங்களும் ரசிகர்களை உருக்கி கண்ணீர் வரவழைத்த காட்சிகளாகும். "எல்லோரும் நம்மைவிட்டுப் போனப் பிறகு ,உடலும் , மனமும் தளரும் போது புரியும்டா உறவுகளின் வலிமை உனக்கு " என்று அம்மா சொன்னதை வயதான மணி நினைத்துப் பார்ப்பது நெகிழ்வான ஒரு தருணம்.
கனமான கதைக் கருவிலும் சித்தப்பா கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவை காட்சிகள் கதை ஓட்டத்தைக் கெடுக்காமல் அதே சமயம் மனம் விட்டு சிரிக்கும் படியாகவும் இருந்தது. இயல்பான நகைச்சுவையுடன் கூடிய காட்சிகளும், வசனங்களும் ஆரவாரமான வரவேற்பினைப் பெற்றன. கதையின் இணைந்து செல்லும் பாடலும் பின்ணணி இசையும் ரசிக்கத்தக்கதாக அமைந்திருந்தன.
உடன் இருக்கும் போது உறவுகளின் வலிமை புரிவதில்லை. அதே உறவுகளுக்காக நாம் ஏங்கும் போது அதன் வலி அதிகம் . உறவுகளின் வலிமையையும் அழுத்தமாகச் சொல்வதுடன் இன்று பெரும்பாலான குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் ஓய்வுக் காலத்தை எதிர்கொள்ளும் வழியறியாமல் தங்களைத் தாங்களே தனிமையிலும் முதுமையிலும் வருத்திக் கொள்ளாமல் உற்சாகமான திட்டங்களுடன் எதிர் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் இந்த நாடகம் வலியுறுத்துகிறது.
அம்மா, அப்பா, சித்தப்பா, ஸ்ரீதர், சமையல்காரர், மணி, மணியின் மனைவி ஆகியோர் நெஞ்சில் நிற்கும் சில கதாபாத்திரப் படைப்புகள். அம்மாவாக தீபா ராமானுஜமும், அப்பாவாக மும், இளம் வயது மணியாக ராஜீவும், ராஜீவின் இளம் மனைவியாக வும், முதுமையான மணியாக நவீன் நாதனும் அவரை உற்சாகமான இளைஞராக மாற்றும் நண்பர் ஸ்ரீதராக கணேஷும், கல கலப்பான சித்தப்பாவாக திலீப் ரத்தினமும் அருமையாக நடித்திருந்தனர். நாடகத்தில் நடித்த குழந்தைகள் உட்பட அனைவருமே தாங்கள் ஏற்றிருந்த பாத்திரத்தின் கனத்தை உணர்ந்த்து வெகு இயல்பான நடிப்பை அளித்திருந்தனர்
இயல்பான அரங்க அமைப்பு, இந்த நாடகத்தின் பல சம்பவங்கள் என் வாழ்வில் நடந்தது என்றும், இது என் கதையைப் போல் உள்ளது என்றும், இந்நாடகம் எனக்கு ஒரு புதிய நம்பிக்கயைத் கொடுத்திருக்கிறது என்றும் நாடகம் பார்த்த பலரும் கூறியது இந்நாடகத்தின் மிகப்பெரிய வெற்றி. நாடகத்தினைக் காண பிற மொழி இந்தியர்களும், அமெரிக்கர்களும் வந்திருந்தார்கள் அவர்கள் நாடகத்தினை எளிதாகப் புரிந்து கொள்ள வசதியாக சினிமாக்களிம் வருவது போன்ற ஆங்கில வசனங்களை மின் திரையில் ஓட விட்டிருந்தது சிறப்பான ஏற்பாடாகவும் நாடகங்களில் ஒரு புதிய முயற்சியாகவும் அமைந்திருந்தது. அந்த ஆங்கில வசனங்கள் அருமையான மொழிபெயர்ப்பும் கச்சிதமான ஒருங்கிணைப்பும் கொண்டிருந்தது.
பாரதி தமிழ்ச் சங்கத்தினர் வரும் பொங்கல், சித்திரை மாதம் வரும் தமிழ் புத்தாண்டு, நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகைகளையும் இப்பகுதி வாழும் குழந்தைகளின், இளைஞர்களின், பெரியோர்களின் அனைத்துத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட இருக்கிறார்கள். இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் தவிர இலக்கிய நிகழ்ச்சிகளையும், பிரபல எழுத்தாளரின் இலக்கிய சொற்பொழிவு, கலந்துரையாடல்களையும், மாணவர்களுக்கான போட்டிகளையும் வரும் ஆண்டில் நிகழ்த்த இருக்கிறார்கள்.பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு உதவ விரும்பும் அனைவரும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பாரதி தமிழ்ச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
ராகவேந்திரன் 785 979 5497
வாசுதேவன் : 510 868 0510
திருமுடி : 510 684 9019
2011ம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டு விழா
சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்
வழங்கிய கர வருட சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதத்திலும் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ் புத்தாண்டினை சிறப்பாக வரவேற்றுக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த கர வருடத்தினையும் பாரதி தமிழ்ச் சங்கம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. தொன்றுதொட்ட பாரதப் பண்பாட்டின் அடியொற்றியும் தமிழ் முன்னோர்களின் மூத்த கலாசார முறைமைப்படியும், பாரதி தமிழ்ச் சங்கம் சித்திரை மாதத்திலேயே தமிழ் புத்தாண்டான கர வருடத்தை வரவேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி, சனிக்கிழமை அன்று சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை, பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இயல், இசை, பட்டிமன்றம் ஆகிய முத்தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்ட சித்திரைத் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தார்கள். ஹவாயில் அமைந்திருக்கும் சிவாலய சுப்ரமணிய சுவாமி ஆலயத்தைச் சேர்ந்த திரு.சிவராம் ஈஸ்வரன் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தில் இந்து மதத்தின் மேன்மையைக் குறித்து சிறப்புச் சொற்வொழிவு ஆற்றினார்கள்.
கல்பகம் கவுசிக் அவர்களின் மாணவர்கள் பாடிய கடவுள் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழாவில் முதலில் ஆண்டை வரவேற்று ஏராளமான குழந்தைகள் சேர்ந்திசைத்த ஒரு கூட்டுப் பாடல் பாடப் பட்டது. நிகழ்ச்சியினைபாரதி தமிழ் சங்கத்தின் செயலர் திருமுடி, கொளரி, கார்த்திக் மற்றும் இட்ஸ்டிஃப் வானொலியின் ஸ்ரீகாந்த் ஆகியோர் தொகுத்தளித்தனர். பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ராகவேந்திரன் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடப் படுவதின் அவசியம் குறித்தும் பேசினார். தொடர்ந்து பல்வேறு தெய்வீக இசைகள், மெல்லிசைப் பாடல்கள்,கிராமியப் பாடல்கள், கர்நாடக இசைப் பாட்டுக்களாக ஏராளமான இளம் கலைஞர்களால் வழங்கப் பட்டன. வாத்தியங்கள் வாய்ப்பாட்டுக்கள் ஆகிய கச்சேரிகளைத் தொடர்ந்து அற்புதமான பரத நாட்டிய நடனங்கள் பல அரங்கேறின. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சிறியவர்களும் பெரியவர்களும் , இளைஞர்களும் கலந்து கொண்ட பல்வேறு பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. தீபா மஹாதேவன், கொளரி, நித்யவதி, அகிலா நந்தகுமார், மீனா சுரேஷ், லதா ஸ்ரீநிவாசன், ஜெயஸ்ரீ, சுந்தரி, மீனாட்சி, கமலா,சுபா,ஸ்ரீலதா,திருமதி சரவணன், ரம்யா, சஃபாரி கிட்ஸ் பள்ளி ஆகியோரின் இயக்கத்தில் ஏராளமான சிறுவர்களும் இளைஞர்களும் குழுவாகவும் தனியாகவும் பரத நாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற நடனங்கள், வயலின், வீணை இசை, பிற நடனங்கள், சிறு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நிகழ்த்தினார்கள்.
கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வளைகுடாப் பகுதியின் பிரபல நாடக இயக்குனரும், நடிகரும், பேச்சாளருமான மணிராம் அவர்கள் தலைமையில் இன்றைய நெருக்கடியான வாழ்வில் பின்பற்ற வேண்டியது சத்தியமே, சாமர்த்தியமே என்ற தலைப்பில் ஒரு சுவாரசியமான பட்டிமன்றமும் அரங்கேறியது. சத்தியமே என்ற தலைப்பில் ரேவதி, விஸ்வநாதன், பத்மநாபன் ஆகியோரும் சாமர்த்தியமே என்ற தலைப்பில் கனகா குருப்ரசாத், அந்தோணி தாஸ், காமாட்சி சுந்தரம் ஆகியோரும் சுவையான விறுவிறுப்பான விவாதங்களை எடுத்து வைத்தனர்.
வளைகுடாப் பகுதியில் வாழும் தமிழ்ச்சமுதாத்தின் அனைத்து தனித்துவமான திறமைகளுக்கும் பாரதி தமிழ்ச்சங்கம் கட்டற்றதொரு மேடை வழங்கி அவர்களது திறமைகளையும் தன்னம்பிக்கைகளையும் தொடர்ந்து வளர்த்து வரும் தொண்டு, கலந்து கொண்ட அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றது.
பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஜூன் மாத நிகழ்ச்சிகள்:
தமிழ் புத்தாண்டினைத் தொடர்ந்து பாரதி தமிழ்ச் சங்கம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ பகுதி தமிழர்களுக்காக வழங்க உள்ளது.
பாரதி தமிழ்ச் சங்கம் வரும் ஜுன் 17ம் தேதி ”அன்னபூர்ணா” என்னும் உணவு நன்கொடை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்து தர்மத்தின் படி அனைவருக்கும் அன்பையும், அருளையும் உணவையும் வழங்கும் தேவியைக் குறிப்பது அன்னபூர்ணா. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் வசிக்கும் அனைத்துச் சமூகத்தினரிடமும் நம் அன்பும் நட்பும் கொண்டு செல்ல, உதவும் வண்ணம் ஒரு சமூக சேவையாக வீடில்லாதவர்களுக்கு உணவுப் பொருட்களை அளிக்க இந்தஅன்னபூர்ணா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு உதவ விரும்புவோர் அன்னபூர்ணா நிகழ்ச்சியின் கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்
அருட்செல்வன் (916)316 6954 ;
நித்யவதி (510)687 1950 ;
ஜூலை மாத நிகழ்ச்சி:
இன்ஃபினிடி பவுண்டேஷன் தலைவர் ராஜீவ் மல்ஹோத்ரா அவர்களும் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகளின் விளைவாக ஆதாரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ”ப்ரேக்கிங் இந்தியா” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஜூலை 3ம் தேதி மில்பிட்டாஸ் நகரின் வைஷ்ணவப் பரிவார் அரங்கில் மாலை 3 முதல் 5 வரை நடைபெற இருக்கிறது. இந்த நூல் இந்தியாவைப் பிளவு படுத்த முயலும், இந்தியாவின் தேசீய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க முயலும் பல்வேறு சக்திகளை ஆதாரங்களுடன் அடையாளம் காண்பிக்கின்ற ஒரு முழுமையான நூலாகும். புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான திரு.ராஜீவ் மல்ஹோத்ரா உரையாற்றி புத்தகத்தை அறிமுகப் படுத்தவிருக்கிறார். அனைவரும் கலந்து கொண்டு இந்தியாவை எதிர்நோக்கியிருக்கும் அபாயங்கள் குறித்த ஒரு முழுமையான விழிப்புணர்வைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம் அமைப்பு பிற இந்திய அமைப்புகளுடன் இணைந்து வழங்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு:
2011ம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி நிகழ்ச்சி
சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய தீபாவளித் திருநாள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். பாரதியாரின் “வையத் தலைமை கொள்” என்னும் வாக்கை தன் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வரும் பாரதி தமிழ்ச்சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி வாழ் தமிழ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைத்திறனையும் ஆளுமைத்த் திறனையும் ஊக்கப் படுத்தி அவர்கள் திறமைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதுடன் இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகளைகளையும் சிறப்பான முறையில் கொண்டாடி வரும் அமைப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் பாரதத்தின் பாரம்பரியப் பண்டிகையான தீபாவளித் திருநாளை பாரதி தமிழ்ச் சங்கம்விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. கடந்த நவம்பர் 19ம் தேதி, சனிக்கிழமை அன்று மில்பிடாஸ் ஜெயின் கோவில் கலையரங்கில் மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை, பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்ட தீபாவளிக் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தார்கள். இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத் தன்மைக்கு எப்படி ராமாயணம் ஒரு வாழும் உதாரணமாக இணைப்பாக விளங்குகிறது என்பது குறித்தும் தீபாவளி பாரதத்தை ஒன்றாக இணைக்கும் ஒரு கலாச்சார கொண்டாட்டம் விடுதலையின் குறியீடு என்பதையும் விளக்கும் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்ற தீபாவளி மலர் ஒன்று கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப் பட்டது.
சுந்தரின் வயலின் இசையுடன் ப்ரவீன் விநாயகரைத் துதித்துப் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள் இடைவிடாத இசை மழையாகப் பொழிந்தன. நிகழ்ச்சியினை பாரதிதமிழ் சங்கத்தின் செயலர் திருமுடி மற்றும் பொருளாளர் வாசு ஆகியோர் தொகுத்தளித்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிய தமிழக அரசின் ஆணையை பாரதி தமிழ்ச் சங்கம்வரவேற்று, நன்றியைத் தெரிவித்தது. தொடர்ந்து பல்வேறு தெய்வீக இசைகள், மெல்லிசைப் பாடல்கள்,கிராமியப் பாடல்கள், கர்நாடக இசைப் பாட்டுக்களாக ஏராளமான இளம் மற்றும் பிரபலமான கலைஞர்களால் வழங்கப் பட்டன. வாத்தியங்கள் வாய்ப்பாட்டுக்கள் ஆகிய கச்சேரிகளைத் தொடர்ந்து அற்புதமான பரத நாட்டிய நடனங்கள் பல அரங்கேறின. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சிறியவர்களும் பெரியவர்களும் , இளைஞர்களும் கலந்து கொண்ட பல்வேறு பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அகிலா ஐயர், பாரதி சிவராமக்கிருஷ்ணன், தீபா மஹாதேவன், காயத்ரி சுகவனம், கீதா ஷங்கர், கோபி லஷ்மிநாராயணன், ஹரி தேவநாத், கொளரி சேஷாத்ரி, ஹரிப்ரியா சுந்தரேஷ், லதா ஸ்ரீநிவாசன், லலிதா குணசேகரன், மணி பெரியாழ்வார்,வாணி ராம், நித்யவதி சுந்தரேஷ், ரேணுகா, சுகந்தா ஐயர், சுகி சிவம், ஸ்ரீகாந்த் சாரி, ஷங்கர், உஷா ராஜேஷ், சுகி பரன், சுந்தர், சஃபாரி கிட்ஸ் பள்ளி ஆகிய ஆசிரியர்கள்/குழுவினரின் இயக்கத்தில் ஏராளமான சிறுவர்களும் இளைஞர்களும் குழுவாகவும் தனியாகவும் பரத நாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற நடனங்கள், வயலின், மிருதங்கம், வீணை இசை, பிற நடனங்கள், சிறு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நிகழ்த்தினார்கள். சிறுவர்கள் அளித்த சீதா கல்யாணம் நாட்டிய நாடகமும், கம்பரும் ஒட்டக் கூத்தரும் நாடகமும் பலத்த வரவேற்பை பெற்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
குழுவினர்களின் நடனம் மற்றும் இசை வெள்ளத்தைத் தொடர்ந்து தனிப் பாடல்களாக ஸ்ருதி அரவிந்தன், விஸ்வா மணிராம், விஷான் ஷங்கர், காயத்ரி, மணிராம், ரெங்கா, வெங்கட், கீர்த்தனா ஸ்ரீகாந்த் ஆகியோர் கர்நாடக இசை மற்றும் திரையிசையைப் பாடினார்கள். ஸ்ருதி பாடிய சிங்கார வேலனே தேவா,கீர்த்தனாவின் ராகமாலிகை, வளைகுடாப் பகுதியில் இருந்து தமிழ் சினிமாவில் பின்ணணி பாடும் பிரகதி குருப்ரசாத்தின் பாடல், காயத்ரி பாடிய திரையிசைப் பாடல்கள், ரெங்கா வெங்கட் இணைந்து பாடிய திரையிசைப் பாடல்கள்,வளைகுடாப் பகுதியின் பிரபல நாடக இயக்குனர் மணிராமின் பாடல்கள் ஆகியவை ஏகோபித்த ஆரவாரமான வரவேற்பைப் பெற்றன. மிகக் கடினமான ராகங்களையும், அபாரமான திறமை கோரும் பாடல்களையும் இந்த வளைகுடாப் பகுதி கலைஞர்கள் அநாயசமாகக் கையாண்டனர். கிட்டத்தட்ட 200 வளரும் மற்றும் வளர்ந்த கலைஞர்களின் தனித்துவமான திறமைகளுக்கு இந்த தீபாவளி நிகழ்ச்சி மூலமாக பாரதி தமிழ்ச்சங்கம் மீண்டும் ஒரு கட்டற்றதொரு மேடை வழங்கி அவர்களது திறமைகளையும் தன்னம்பிக்கைகளையும் வெளிக் கொணர்ந்து கலந்து கொண்ட அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் பெற்றது
வரும் மாதங்களில் பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கவிருக்கும் எதிர்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கும், பாரதி தமிழ்ச் சங்கத்தின் துணையுடன் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்.
ராகவேந்திரன் 785 979 5497
திருமுடி 510-604-9019
வாசுதேவன் 650 868 0510
மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com
பாரதி தமிழ்ச் சங்கத்தின் டிசம்பர் மாத நிகழ்ச்சி: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பழமொழிக்கேற்ப பாரதி தமிழ்ச் சங்கம் வரும் டிசம்பர் 9ம் தேதி ”அன்னபூர்ணா” அமைப்புடன் இணைந்து எளியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் வசிக்கும் அனைத்துச் சமூகத்தினரிடமும் நம் அன்பும் நட்பும் கொண்டு செல்ல, உதவும் வண்ணம் ஒரு சமூக சேவையாக வீடில்லாதவர்களுக்கு உணவினை அளிக்க இந்தஅன்னபூர்ணா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு உதவ விரும்புவோர் அன்னபூர்ணா நிகழ்ச்சியின் கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்
அருட்செல்வன் (916)316 6954 ;
மின்னஞ்சல் தொடர்புக்கு: nithyavathy@gmail.com
2011ம் ஆண்டு பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய அன்னபூர்ணா நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கலிஃபோர்னியா சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியில் மிகச் சிறப்பாக இயங்கி வரும், பதிவு செய்யப்பட்டு வரிவிலக்குப் பெற்ற ஒரு தமிழ் கலாச்சார அமைப்பாகும். பாரதியாரின் “வையத் தலைமை கொள்” என்னும் வாக்கை தன் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வரும்பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி வாழ் தமிழ் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைத்திறனையும் ஆளுமைத்த் திறனையும் ஊக்கப் படுத்தி அவர்கள் திறமைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகளையும், இலக்கிய நிகழ்ச்சிகளையும், சமூக நல உதவிகளையும் நடத்தி வருவதுடன் இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகளைகளையும் சிறப்பான முறையில் கொண்டாடி வரும் அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய டிசம்பர் மாத அன்னபூர்ணா நிகழ்ச்சி:
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பழமொழிக்கேற்ப பாரதி தமிழ்ச் சங்கம் வளைகுடாப் பகுதியின் சில சேவை அமைப்புகளுடன் இணைந்து டிசம்பர் 9ம் தேதி ”அன்னபூர்ணா” என்ற எளியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் வசிக்கும் பிற சமூகத்தினரின் தேவைகளுக்கும் தமிழ் அமைப்புகள் உதவும் நோக்கத்துடன் இந்த அன்னபூர்ணா நிகழ்ச்சியை வருடத்திற்கு நான்கு முறை நடத்தி வருகிறது.சான் ஓசே நகரில் அமைந்துள்ள லோவ்ஸ் அண்டு ஃபிஷஸ் அட் ஈஸ்ட் சைட் நெய்பர்ஹூட் செண்ட்டர் என்ற இடத்தில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடை பெற்றது.
300க்கும் மேற்பட்ட வீடிழந்த மற்றும் உணவு தேவைப் படும் எளியவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நான், சன்னா மசலா, ஃப்ரைடு ரைஸ், பன்னீர் மசலா, லெமன் சாதம், அப்பளம், காய்கறி சாலட், பழங்கள், பழரசங்கள், இந்திய இனிப்பு வகைகள் ஆகியவை அடங்கிய சுவையான இந்திய சைவ உணவு அன்றைய உணவாக வந்திருந்தவர்களுக்கு வழங்கப் பட்டது. 20க்கும் மேற்பட்ட சேவகர்களின் துணையுடன் இந்த உணவு வழங்கல் நிகழ்ச்சியை டாக்டர் அருட் செல்வன் மற்றும் நித்யவதி சுந்தரேஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
அங்கு உணவு கொள்ள வந்திருந்தவர்கள் பல்வேறு காரணங்களினால் வீடு இழந்தவர்கள் தங்க இடமில்லாதவர்கள் ஆதரவற்ற முதியவர்கள் கை விடப் பட்டவர்கள், வேலை இழந்தவர்கள், புகலிடம் இல்லாமல் போனவர்கள். இவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் ஒரு வேலையும், இருப்பிடமும் வாழ்க்கையும் அமையலாம் அப்பொழுது தத்தம் வீடுகளில் பாதுகாப்பான சூழலில் மீண்டும் உணவு அருந்தும் சூழலுக்குத் திரும்பலாம், பலருக்கு இது ஒன்றே நிரந்தர வழியாகவும் தொடரலாம். ஆனால் இவை போல நகரமெங்கும் வறுமையில் வாடுபவர்களுக்கான உணவு அளிக்கும் ஏற்பாடுகள் அவர்களை அன்றையப் பசிக் கொடுமையிலிருந்து காப்பாறி விடுகின்றன. அப்படி உணவு நாடி வருபவர்களின் கண்ணியத்திற்கு எந்த விதத்திலும் இழுக்கு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அமைப்பாளர்கள் கவனமாக இருந்தார்கள். அவர்களுக்கு நல்ல சூழலில் நல்ல சத்தான உணவு தருவதிலும், அப்படி அந்த உணவைத் தயார் செய்பவர்கள் எந்தவிதமான தொற்று நோய்களும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும் அந்த அமைப்பினர் அக்கறை எடுத்துக் கொண்டனர்.
2012ம் ஆண்டிலும் இந்த அன்னபூர்ணா நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த உணவு வழங்கல் நிகழ்ச்சிக்கு உணவுப் பொருட்கள் வழங்கவும், நன்கொடை அளிக்கவும், நிகழ்ச்சியில் உதவி செய்யவும் விரும்புபவர்கள் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்
அருட்செல்வன் (916)316 6954 ;
நித்யவதி (510)687 1950 ;
மின்னஞ்சல் தொடர்புக்கு: nithyavathy@gmail.com